மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக என். வேதநாயகம் நியமனம்!
>> Tuesday, 11 January 2011
மன்னார் மாவட்டத்தின் 21 ஆவது புதிய அரசாங்க அதிபராக இன்று மாலை 2.30 மணி அளவில் என். வேதநாயகம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுவரை காலமும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றி வந்த ஏ.நிக்கலொஸ் பிள்ளை திடீர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள பொது நிர்வாக அமைச்சிற்கு செல்லும் நிலையிலேயே வேதநாயகம் புதிய அரசாங்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே தற்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்..
இதேவேளை மன்னார் மாவட்ட செயலகத்தில் திட்டப்பணிப்பாளராகக் கடமையாற்றிவந்த பத்திநாதன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்ற நிலையில் இன்று காலை 10.30 அளவில் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.