கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

தேசிய இளைளுர் சேவைகள் மன்றத்தின் 22வது தேசிய விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக 42 இளைஞர்கள் கண்டி பயணம்-

>> Tuesday, 2 February 2010

09-11-2010
தேசிய இளைளுர் சேவைகள் மன்றத்தின் 22வது தேசிய விளையாட்டு விழா நாளை மறுதினம் (வியாழன்) 11ம் திகதி கண்டி நாவலப்பிட்டியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக மன்னாரில் இருந்து நாளை 42 இளைளுர், யுவதிகள் கண்டி செல்வதாக மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார் பிதேச இளைஞர் சேவை அதிகாரி டி.புலோகராஐக் தெரிவித்தார்.

கண்டி நாவலப்பிட்டியில் நாளை 11ம் திகதி காலை மேற்படி விளையாட்டுக்கள் ஆரம்பாகவுள்ளது.இந்த விளையாட்டு விழாவிற்கு நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள இளைளுர் விளையாட்டுக் கழகங்களிலும் இருந்தும் இளைளுர் யுவதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.11ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரை மேற்படி விளையாட்டு விழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர்


Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP