கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

'அப்பா உன் மடியில்........' இறுவெட்டு வெளியீட்டு விழா

>> Sunday, 20 September 2009

அருட்தந்தை றொக்சன் அவர்களின் இறுவெட்டு வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
வங்காலை புனித ஆனாள் ஆலய உதவிப் பங்குத்தந்தை அருட்பணியாளர் அ.றொக்சன் குரூஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட'அப்பா உன் மடியில்'....எனும் வெளியீட்டு விழா கடந்த 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வங்காலை புனித ஆனாள் ஆலய முன்றலில் நடை பெற்றது.

மன்னார் ஆயர் மேதகு இரா-யோசேப்பு ஆண்டகை இவ் விழாவிற்கு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினராக மன்னார்-வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபைப் பொறியியலாளர் ஜோய்ஸ் குறூஸ் கலந்து கொண்டார் மதிப்பீட்டுரையை மன்னார் தமிழ்ச் சங்கத்தலைவர் அருட்பணியாளர் தமிழ்நேசன் வழங்கினார்.

இந் நிகழ்வில் பல குருக்கள்,அருட் சகோதரிகள்,வங்காலை மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP