கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னாரில் 6 தினங்களுக்கு மின் தடை : சபை அறிவிப்பு _

>> Sunday, 20 September 2009

மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் உள்ள அதி உயர் மின் கோபுரங்களில் திருத்த வேலைகள் நடைபெறுவதால், எதிர்வரும் 06 தினங்களுக்கு மின் தடை ஏற்படும் என மன்னார் மின்சார சபை அறிவித்துள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் 9,11,13,18,24,27 ஆகிய 06 தினங்களில் காலை 8.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை மின் தடை ஏற்படும் என மன்னார் மின்சார சபை மின் பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

எனினும் மன்னாரில் ஒவ்வொரு மாதமும் ஒரு காரணத்தைக் கூறி மின்தடை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP