மன்னாரிலிருந்து கொழும்பு வந்த பஸ் ஆனமடுவவில் விபத்து : நால்வர் பலி (பட இணைப்பு) _
>> Tuesday, 21 September 2010
மன்னார் மாவட்டத்தின் ஆனமடுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் உயிர் இழந்தமையுடன் சாரதி உட்பட 06 பேர் காயம் அடைந்துள்ளார்கள்.
மன்னாரிலிருந்து, கொழும்பை நோக்கி 25 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து வேப்ப மரம், மின் கம்பம் ஆகியவற்றுடன் மோதுண்டது.