மட்டக்களப்பு கரடியனாறில் வெடிப்பு சம்பவம் : 60 பேர் பலி - 50க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி
>> Friday, 17 September 2010
இன்று கரடியனாறு காவற்துறை நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 60க்கு பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் 46க்கம் அதிகமானவர்கள் இதுவரையில மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்துள்ளவர்களுள் பொது மக்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.