கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

தரம் 05 புலமைப்பரிசில் பரிட்சையில் மன்னார் மாவட்டம் இம்முறை வரலாற்றுச்சாதனை

>> Saturday, 6 March 2010

இவ்வருடம் (2010) நடைபெற்ற தரம்-5 புலமைப்பரிசில் முடிவுகளின் படி மன்னார் கல்வி வலயமும்,மன்னார் மாவட்டமும் முன்னெப்போதும் கண்டிராத வரலாற்று ரீதியான சாதனையினை இம்முறை படைத்துள்ளதையிட்டு கல்வி ஆர்வமுடைய அணைவருக்கும் மன்னார் கல்வி வலயம் சார்பாக இச்சாதனையினை பெருமையுடன் கூறிக்கொள்ளுகின்றேன் என மன்னார் வலயக்கல்விப்பனிப்பாளர் எம்.ஆபேல் றெவ்வல் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் முதன் முறையாக ஆகக்கூடிய புள்ளியான 190 புள்ளிகளை தனதாக்கி,மன்னார் மாவட்டத்தின் முதல் நிலை மாணவனாகவும்,தேசிய ரீதியில் 3ஆம் நிலை மாணவனாகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சாதனையாளனான மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசியப்பாடசாலை மாணவன் செல்வன் ஜெ.யுட் மிதுசனுக்கு கௌரவமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைவதாக தெரிவித்தார்.




இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் மன்னார் மாவட்டத்தில் 1464 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் 129 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர் (SRL)

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP