வங்காலையில் புதிய வரலாறு படைத்த "மரிசித்தாள்" நாடகம்-(பட இணைப்பு)
>> Wednesday, 6 January 2010
மரிசித்தாள் என்னும் ஈரிரவு நாடகம் திட்டமிட்டவாறு ஒக்டோபர் 15,16ஆம் திகதிகளில் வங்காலைப் பங்கு மக்களால் புனித ஆனால் ஆலய முன்றலில் மேடையேற்றப்பட்டு பலரினதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. "வெள்ளைப்புலவர்" என அழைக்கப்படும் புலவரால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாடகம், வங்காலைப் பங்கு மக்களால் புனிதமான ஒரு கலைப்பெட்டகமாக பேணி பாதுகாக்கப்பட்டு வருவதுடன், தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறையேனும் மேடையேற்றப்பட்டு வந்துள்ளது. ஆலய திருவிழாக்களை இக்கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவது போல, இந்த நாடகத்தையும் பெருவிழாவாகக் கொண்டாடுவது மரபு. எனினும் நாட்டில் நிலவிய அசாதாரன சூழ்நிலைகளினால் (யுத்தம்,இடப்பெயர்வு) இந்நாடகம் கடந்த 30 வருடங்களாக மேடையேற்றப்படவில்லை.
அ.நிஷாந்தன் வாஸ்