கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

கடும் மழையினால் மன்னாரில் அதிகளவான குடும்பங்கள் பாதிப்பு

>> Friday, 4 December 2009

மன்னாரில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தலைமன்னார் கிராமம்,தலைமன்னார் பியர் ஆகிய கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 750 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேசச்செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்து வந்த அடை மழையின் காரணமாக குறித்தப்பகுதியில் உள்ள வீதிகள்
மழை நீரில் முழ்கியுள்ளதாகவும் வீடுகளினுள் மழை நீர் தேங்கியுள்ளதாகவும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 3 நாட்களுக்கான உணவு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மன்னார் பிரதேசச் செயலார் தெரிவித்தார்




மன்னார் நிருபர்-

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP