மன்னாரிலிருந்து கொழும்பு வந்த பஸ் ஆனமடுவவில் விபத்து : நால்வர் பலி (பட இணைப்பு) _
>> Friday, 18 December 2009
மன்னார் மாவட்டத்தின் ஆனமடுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் உயிர் இழந்தமையுடன் சாரதி உட்பட 06 பேர் காயம் அடைந்துள்ளார்கள்.
மன்னாரிலிருந்து, கொழும்பை நோக்கி 25 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து வேப்ப மரம், மின் கம்பம் ஆகியவற்றுடன் மோதுண்டது.
இறந்த நால்வரில் இருவர் ஆண்களும், இருவர் பெண்களும் ஆவர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்த விசாரணைகளை ஆனமடுவ பொலிஸ் நிலையப் பொலிஸார் முடுக்கி விட்டுள்ளார்கள்.

