மன்னார் பேசாலையில் 17 டெங்கு நோயாளர்கள் _
>> Friday, 2 April 2010
மன்னார் பேசாலை பகுதியில் 17 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக மன்னார் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் நோய்த் தொற்றுவதற்கு வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மன்னார் மாவட்ட சுகாதார திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக சுகாதாரக் கல்வி தொடர்பான குறும்படக் காட்சியும் காண்பிக்கப்பட்டு வருவதாக எமது மன்னார் செய்தியாளர் தெரிவிக்கிறார்.