கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னார் பாலத்தின் கட்டுமானப் பணிகளில் முன்னேற்றம்

>> Wednesday, 6 January 2010

மன்னார் தீவை பெருநிலப்பரப்புடன் இணைக்க புதிதாக கட்டப்பட்டு வரும் மன்னார் பாலத்தினதும் நடைபாதையினதும் 97 சதவீத கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் விரைவில் திறப்பதற்கான தயார் நிலையில் உள்ளதாகவும் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

2007 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த மேம்பால மற்றும் சாலையோர நடைபாதை கட்டுமானப் பணிகள் இந்த வருடம் முடிக்கப்படும் என்று தெரிகிறது.

சிறிலங்கா அரசு சுமார் 2460 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டில் இந்த திட்டத்தை தொடங்கியது. விடுதலைபுலிகளின் போராட்ட செயல்பாடுகளால் 2007 ஆம் ஆண்டு தொடங்க வேண்டிய கட்டுமான பணிகள் 6 மாத கால தாமதத்திற்குப் பின் 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP