இலங்கையின் 6வது ஜனாதிபதி தோ்தலில் மகிந்த ராஜபக்ச 18 லட்சம் அதிகப்படியான வாக்குகளினால் மாபெரும் வெற்றி
>> Saturday, 30 January 2010
இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தோ்தலின் சகல மாவட்டங்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளநிலையில் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச போட்டி வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 1,842, 749 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார்.
இத்தோ்தலில் மகிந்த ராஜபக்ச 6,015,934 வாக்குகளை பெற்று;ள்ளார் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா 4,173,185 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தற்போதைய நிலைவரங்களின் படி மகிந்த ராஜபக்ச 1,842,749 அதிகப்படியான வாக்குகள் பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார்.
மகிந்த ராஜபக்ச 16 மாவட்டங்களிலும் எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகா 6 மாவட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.