மன்னார் மக்களின் பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரரேமஜயந்த தலைமையிலான குழு ஆராய்வு!
>> Sunday, 20 September 2009
November 8th, 2009
மன்னார் மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள், மாவட்டத்தின் பாதுகாப்புக் கெடுபிடிகள் மற்றும் பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் அரசாங்க செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சவின் பிரதிநிதியாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதியின் ஆலோசகர் சாந்த பிரேமரத்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.