பெருக்கமரம்
>> Tuesday, 15 September 2009
மன்னார் நகரப் பகுதியில் நகரத்தில் உள்நுளைகையில் அல்லது வெளியேறும் இடத்தில் பாலத்திற்கு அருகில் மூர்வீதியில் ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் சித்திவிநாயகர் கல்லூரிக்கு சற்றே அப்பால் பெருக்க மரம் ஒன்றுள்ளது. இது பருமனில் பெருத்தவண்ணமுள்ளது. இதை அருகில் உள்ள தேவாலயம் ஒன்று பராமரித்து வருகின்றது பெருக்கமரம் என்ற நீண்ட வயதும் அடி பெருத்ததுமான மரம் நிற்கிறது. ஆயிரம் வருசத்துக்கும் அதிகமான காலம் இந்த வகை மரங்கள் நிற்கிறது .இந்த மரங்களை குதிரைகளுக்கான உணவுக்காக அரேபியர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள்.